சிகரம் பாரதி 22 / 50 - தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
வணக்கம் வலைத்தள வாசகர்களே! உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். இந்த இனிய நன்னாளில் கவலைகளை மறந்து பகைமையைக் கைவிட்டு உறவுகளுடன் இனிதே பண்டிகையைக் கொண்டாடி மகிழுங்கள். எல்லா நாளும் போல இதுவும் ஒரு நாளே. ஆயினும் இந்த நன்னாளில் இருந்து உங்கள் வாழ்க்கையில் புதிய வெளிச்சம் ஒளி வீச வாழ்த்துகிறேன். இனிப்புகளை மட்டுமல்லாது இனிய வார்த்தைகளையும் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களிடம் இருந்து தொடங்கும் மகிழ்ச்சி உலகெலாம் பரவட்டும். உங்கள் புன்னகையால் அனைவரையும் அரவணைத்திடுங்கள். இந்தத் தீபாவளித் திருநாள் உங்கள் வாழ்க்கையின் மற்றுமோர் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கும் நன்னாளாக அமையட்டும்.
தொலைக்காட்சிகளையும் பேஸ்புக் , டுவிட்டர் போன்ற சமூகக் குப்பைகளையும் வாட்ஸப் , வைபர் போன்ற தொல்லைகளையும் கைவிட்டு முழு மனதுடன் தீபாவளித் திருநாளைக் கொண்டாடிடுங்கள். அப்போது தான் அது உண்மையான பண்டிகையாக அமையும். சமூக வலைத்தளங்கள் என்னும் இணையக் குப்பைகளால் தான் நாம் இயந்திரத் தனமாக நமது பண்டிகைகளை கடமைக்காகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்றைய நாளில் உறவுகளுடன் இணையத்தினூடாக அல்லாமல் இதயத்தினூடாக உறவாடுங்கள். கைப்பேசியின் கைகளை விட்டுவிட்டு உறவுகளுடன் கரம் கோர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குள் இன்னும் மகிழ்ச்சியை வழங்கும். தொல்லைகளெல்லாம் மறந்து பிள்ளை உள்ளத்துடன் இந்தத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்திடுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
இனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDelete