வர்லாம் வா... வர்லாம் வா... பைரவா!

வணக்கம் வலைத்தள நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். பைரவா பாத்துட்டீங்களா? சிலர் திரையரங்கில் பார்த்திருப்பீர்கள். பலர் இணையத்தில் பார்த்திருப்பீர்கள். நானும் உங்களில் பலரைப் போல் 'தமிழ் ராக்கர்ஸ்' இன் உபயத்தில் இணையத்தினூடே பார்த்து ரசித்தேன். இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரைக்கதை இணையத்தில் வெளியாகிவிடுகிறது. ஏன் சில நேரங்களில் திரைப்படமே வெளியாகிவிடுவதுமுண்டு. திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டு அத்திரைப்படம் முடிந்து ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியே வருவதற்குள்ளாகவே திரைப்படம் குறித்து தமது கருத்தினை இணையத்தளங்களூடாகவும் சமூக வலைத்தளங்களூடாகவும் வெளிட்டுவிடுகின்றனர். முதல் நாள் முதல் காட்சி முடிந்த சில நிமிடங்களில் இணையத்தில் திரைப்படம் வெளியாகிவிடுகிறது. இந்தச் சூழலில் திரைக்கதையும் படக்குழுவும் சரியான பாதையில் பயணித்தால் மட்டுமே மக்களை திரையரங்கின் பக்கம் ஈர்க்க முடியும். 

பைரவா. பரதனின் கதை-வசனம்-இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நடித்து விஜயா புரொடக்க்ஷன்ஸ் வெளியிட்டிருக்கும் திரைப்படம். முதல் நாள் விசேட காட்சி ஜன 12 இல் வெளியானது. நடிகர் விஜய்யின் இயல்பான நடிப்பை அண்மைக்காலமாக எந்தத் திரைப்படத்திலும் காண முடியவில்லை. சிறப்பாக நடிக்கிறேன் என்ற பெயரில் அளவுக்கதிகமான நடிப்பை விஜய் வெளிப்படுத்துகிறார். விஜய்யின் நடிப்பில் இயல்பான நகைச்சுவை உண்டு. ஆனால் அவருக்கேற்ற நகைச்சுவை  ஜோடி இப்போதெல்லாம் அமைவதே இல்லை. பைரவா திரைப்படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே திரைக்கதையை நம்மால் யூகித்துவிட முடிகிறது. கீர்த்தி சுரேஷின் முன்கதைச் சுருக்கம் ஈர்க்கவில்லை. சண்டைகள் வழமையான திரைப்பட ரகம். 

சாதாரண வங்கி ஊழியராக இருக்கும் விஜய் வருமான வரித்துறை அதிகாரியாக வருவதெல்லாம் கற்பனையில் கூட நடக்காத கற்பனை. அதிலும் ஆயிரம் கோடிகளில் தொழில் செய்பவர் விஜய்யை அதிகாரி என நம்புவதெல்லாம்.... நடிகர் சதீஷும் தம்பி ராமையாவும் திரைப்படத்தில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. விஜய்யின் ஆரம்பகாலப் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னரான கில்லி, சிவகாசி போன்ற படங்கள் கூட விஜய்யை ரசிக்க வைத்தன. ஆனால் அண்மைக்காலப் படங்களில் விஜய்க்கு சரியான கதைக்களமோ கதாபாத்திரமோ அல்லது சரியான ஒரு இயக்குனரோ அமையவில்லை என்பது வேதனையே. 

பைரவா பாடல்களிலும் சரி திரைக்கதையில் அல்லது நடிப்பிலும் மக்களை ஈர்க்கவில்லை. விஜய்யின் வெறித்தனமான ரசிகர்களின் கண்மூடித்தனத்தினால் மட்டுமே இப்படம் கொண்டாடப்படுகிறது. வர்லாம் வா... வர்லாம் வா... பைரவா என்று சொல்வதற்குப் பதிலாக வேணாம் போ... வேணாம் போ... பைரவா படம் வேணாம் போ... என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!

Comments

  1. நானும் படம் பார்த்தேன், நீங்கள் சொன்னதையே அப்படியே நானும் படுவன்மையாக வழிமொழிகிறேன்... இதே பீலிங்ஸ் தான் எனக்கும், விஜயின் கொமெடிகள் குறைந்து சண்டைக் காட்சிகள் கூடிவிட்டதுபோல ஒரு உணர்வு...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழி. வணிகம் திரைத்துறையை ஆக்கிரமித்துள்ளதன் விளைவு இது.

      Delete
  2. பார்க்கவில்லைகருத்துநன்கு

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!