தமிழ் வரலாற்றுப் புதினங்கள் - கால வரிசை
வணக்கம் வலைத்தள வாசகர்களே!
தமிழில் இதுவரை பல்வேறு வரலாற்றுப் புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றை இப்பதிவு அக்கதை நிகழும் கால அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது. உங்கள் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. 1895 முதல் வரலாற்றுப் புதினங்கள் எழுதப்பட்டு வருகின்றன. சுமார் 130 வருடகாலமாக வெளியிடப்பட்ட புதினங்களை கதைக்களத்தின் கால வரிசையில் வகைப்படுத்துவதே இப்பதிவாகும். வாசகர்களாகிய உங்கள் ஒத்துழைப்பு இத்தொகுப்பை மேலும் பயனுடையதாக ஆக்கும் என்பதில் ஐயமில்லை.
மேலும் இந்தத் தொகுப்புக்காக தகவல்களைத் தேடிய போது ஒரே கதை ஒவ்வொருவராலும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ளதை காண முடிகிறது. ஆகவே முதலில் தமிழர்களின் சரித்திரத்தை யாரேனும் காலங்களினால் வகைப்படுத்த வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் தமிழர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய வரலாற்றுப் புதினங்கள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். இப்போது தொகுப்பு உங்களுக்காக இங்கே:
கி.மு 200 ( வானவல்லியை அடிப்படையாகக் கொண்டு காலம் கணிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் காலத்தை குறிப்பிடவில்லை)
கரிகால் வளவன் - சோழர்களின் வரலாறு - கி.வா.ஜ ( 1966 )
கி.மு 175
வானவல்லி - சோழர்களின் வரலாறு - சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் ( 2016 )
கி.பி.200
யவன ராணி - சோழர்களின் வரலாறு - சாண்டில்யன் ( 1960 )
கி.பி 700
பார்த்திபன் கனவு - சோழர்களின் வரலாறு - கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி
கி.பி 1000
பொன்னியின் செல்வன் - சோழர்களின் வரலாறு - கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி
கி.பி 1075
கடல் புறா - சோழர்களின் வரலாறு - சாண்டில்யன் ( 1974 )
இப்பதிவு தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும். உங்கள் பரிந்துரைகளை வரவேற்கிறேன்.
நன்றி!
முதல் பதிப்பு : 2016.10.22
இற்றைப்படுத்தல் 01 : விரைவில்...
ReplyDeleteஅருமையான தகவல்