கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 10

பகுதி - 01

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01


பகுதி - 02

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02
 


பகுதி - 03

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03
 


பகுதி - 04

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04
 


பகுதி - 05

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05


பகுதி - 06

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06
 


பகுதி - 07

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07



பகுதி - 08 

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08

பகுதி - 09
 


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/01 


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/02


பகுதி - 10

அன்று மாலை. கடுமையாகப் பெய்து சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மழையும் ஓரளவு பனியும் மக்களை ஐந்து மணிக்கெல்லாம் வீடுகளுக்குள் முடங்கச் செய்திருந்தன. என் இல்லம் தேடி வந்திருந்த நண்பர்களுடன் பாடசாலை செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்தேன். பாடசாலையை நெருங்கியபோது எனக்கு திக்கென்றது. திவ்யா பாடசாலைச் சீருடையில் தனது தோழிகள் புடை சூழ மரத்தடியில் நின்றிருந்தாள். நாங்கள் எங்கள் நடையை மரத்தடியிலிருந்து சற்று தூரத்திலேயே நிறுத்திக் கொண்டோம். 

நண்பர்கள் என்னை "போய்ப் பேசுடா மச்சான்" என்று தள்ளிவிட்டனர். அவர்கள் இப்படி செய்வார்கள் என்று எதிர்பார்க்காத நிலையில் நான் தள்ளிவிடப்பட்டதால் ஓரிரு அடிகள் முன்னோக்கி நகர்த்தப்பட்டேன். உடனே முன்தலை மயிரை இலேசாகக் கோதிவிட்டபடி அவர்களை நோக்கி வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் மெதுவாகச் சென்றேன். 

அருகில் சென்றதும் " திவ்யா... நா... உ... உங்க... கிட்ட... கொஞ்சம் பேசணும்..." என்றேன்.

"இல்ல... குரூப் ஸ்டடி ... பஸ்சுக்காக நிக்கிறோம்" என்று மெல்லிய குரலில் சொன்னாள் திவ்யா.

"சரி... நாளைக்கு...?" 

"... ம் ..."

அவள் 'ம்' என்று சொன்னதுமே நான் பதிலுக்கு எதுவும் பேசாமல் திரும்பிக்கூட பார்க்காமல் வந்துவிட்டேன். நண்பர்கள் கூட்டத்துடன் ஐக்கியமானதும் விசாரணைகள் துவங்கின. 

"என்னடா பேசுன?" - விசு 

"நாளைக்கு பேசணும்னு சொன்னேன்"

"என்ன சொன்னாங்க எங்க அண்ணி?" - முரளி 

"சரின்னு சொன்னா"

"அப்படின்னா நாளைக்கு நீ போகும்போது நாங்க செஞ்சு தர்ற உன் 'காதல் பூங்கொத்தை'யும் எடுத்துக்கிட்டுப் போற. ஓகேவா?" - சுசி 

"காதல் பூங்கொத்தா? என்னடா உளர்ற? இப்பவே இதெல்லாம் தேவையா?"

"அதெல்லாம் முடியாது" - விசு 

"நீ 'காதல் பூங்கொத்து' குடுக்குற. அவ்வளவுதான்" - அனைவரும் ஒருமித்துச் சொன்னார்கள். நானும் நடப்பது நடக்கட்டுமென்று தலையாட்டி வைத்தேன்.


**********

"சரி" - திவ்யா இப்படிச் சொன்னதும் என் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது. மகிழ்ச்சி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. என் உடலின் வற்றிப்போன நதிகளெல்லாம் மகிழ்ச்சி நீரினால் செழிப்படைந்தன. மகிழ்ச்சியின் மிகுதியால் திவ்யாவை இறுகக் கட்டியணைத்து அவளது செவ்விதழ்களில் முத்தமிட்டேன். திவ்யா மறுக்கவில்லை. எனது இதழ்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு தனது கோவைப்பழம் போன்று சிவந்த தனது இதழ்களுக்கு ஆணையிட்டாள் திவ்யா. அவளது உள்ளத்தில் தோன்றிய மகிழ்ச்சியை அவளது இதழ்கள் எனக்குத் தெரியப்படுத்தின.

"நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கிறேன். நீ என்ன சொல்ற?" - என்று கூறிவிட்டு அவளது பதிலுக்காக காத்திருந்த ஓரிரு நிமிடங்கள் அனுபவித்த துன்பம் சூரியனைக் கண்ட பனி போல் அவளது பதிலால் நொடியில் விலகிப் போனது. ஆனால் அந்த மகிழ்ச்சி காலத்திற்குப் பொறுக்கவில்லையோ என்னவோ நெடுநேரம் நீடிக்கவில்லை. சில நொடிகள் முத்தப் பரிமாற்றத்திற்குப் பின் பேச வார்த்தைகள் இன்றி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் புன்னகைத்தபடி நின்றிருந்தோம். அப்போது திவ்யாவின் முகத்தில் தென்பட்ட மாற்றங்கள் என் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சி ரேகைகளை அழித்தன. 

திவ்யாவின் கண்கள் செருகுவதை அவதானித்த நொடியே அவள் நிலை தடுமாறுவதையும் அவதானித்த நான் அவள் சுயநினைவிழந்து மயங்கிக் கீழே விழும் நேரத்தில் என் இரு கரங்களினாலும் தாங்கிப் பிடித்தேன். இதைக் கண்டதும் சுசி எங்களை நோக்கி ஓடி வந்தான். அதேநேரம் திவ்யாவின் கார்க் கதவுகளும் திறந்து கொண்டன. அதிலிருந்து திவ்யாவின் பள்ளித்தோழி ரேவதி இறங்கி ஓடி வந்தாள். 

"மச்சான்... என்னாச்சு?" - சுசி 

"தெரியலடா... திடீர்னு மயங்கிட்டா..." - திவ்யாவை கைத்தாங்கலாக என் தோளில் சாய்த்தபடி பதிலளித்தேன்.

"சரி... கொஞ்சம் தண்ணீர் தெளிச்சுப் பாருங்க" - திவ்யாவின் தோழி ரேவதி சொன்னாள். 

உடனே திவ்யாவை எனது காரின் பின் இருக்கையில் கிடத்தினேன். ரேவதி கொடுத்த தண்ணீரை திவ்யாவின் முகத்தில் தெளித்தேன். அவளது கன்னங்களில் தட்டிப் பார்த்தேன். ஆனால் திவ்யா கண்விழிக்கவில்லை. 

"சரி... வா... ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம்" என்று சுசி சொன்னதும் எனது காரில் திவ்யாவை ஏற்றிக் கொண்டு சுசியுடன் வைத்தியசாலை நோக்கி விரைந்தேன். ரேவதி தான் வந்த காரில் எங்களைப் பின் தொடர்ந்தாள். சுசி காரை ஓட்டினான். பின் இருக்கையில் எனது மடியில் கிடந்தாள் திவ்யா.

மெதுவாக அவள் நெற்றியில் அலைமோதிக் கொண்டிருந்த கூந்தலை பக்கவாட்டில் எடுத்துவிட்டேன். அவளது தலையைக் கோதினேன். துன்பத்திலும் ஒரு இன்பமாக இன்னும் பல போராட்டங்களின் பின் என்மடி சேர வேண்டிய என் திவ்யா இப்போது என் மடியில் கிடந்தாள். இலேசாகப் புன்னகைத்துக் கொண்டேன் நான்.   

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!