வெள்ளித்திரை-தோழா!
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
தோழா ! அருமையான திரைப்படம். பொதுவாகவே நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் விறுவிறுப்பாக இருக்கும். தோழா நகைச்சுவையுடன் வலிகளைக் கலந்து தந்திருக்கிறது. முதலில் தோழா திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த சில காட்சிகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
# "நாலு மாசத்துக்கு நீ சத்தியவானா இருக்கணும்"
"தமிழ்ல சொல்லுங்க"
"நா சொன்னது தமிழ்தான்டா"
# "உன் பெட்ரூமை காட்டுறேன் வா"
"இது பெட்ரூமா?"
"ஆமா. இது ரூமு. இது பெட்டு" என முதியோர் இல்ல பராமரிப்பாளர் கூறுவது சிரிப்பு.
#விக்ரமாதித்யாவை (நாகார்ஜுனா) கவனித்துக் கொள்ளும் பொறுப்புக்கு ஆள் எடுப்பது அருமை.
# வேலை கிடைத்ததும் தனது படுக்கை அறையையும் குளியலறையையும் பார்த்து பிரமிப்படைவது அருமை.
# கண்காட்சியில் ஓவியத்தை பார்த்துவிட்டு தானும் ஓவியம் வரைய முற்படுவது.
# நாகார்ஜுனா மணிக்கூண்டை உற்றுப்பார்ப்பதைக் கண்டதும் "இதெல்லாம் விற்க மாட்டாங்க" என கார்த்தி கலாய்ப்பது.
# பராமளிப்பாளர் என்பதற்காக காவலாளி போல விறைப்பாக இல்லாமல் விளையாட்டுத் தனத்துடன் மகிழ்ச்சிப்படுத்துவது அருமை.
# "என்ன நெனச்சி இந்த ஓவியத்தை வரைஞ்ச?"
தோழா ! அருமையான திரைப்படம். பொதுவாகவே நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் விறுவிறுப்பாக இருக்கும். தோழா நகைச்சுவையுடன் வலிகளைக் கலந்து தந்திருக்கிறது. முதலில் தோழா திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த சில காட்சிகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
# "நாலு மாசத்துக்கு நீ சத்தியவானா இருக்கணும்"
"தமிழ்ல சொல்லுங்க"
"நா சொன்னது தமிழ்தான்டா"
# "உன் பெட்ரூமை காட்டுறேன் வா"
"இது பெட்ரூமா?"
"ஆமா. இது ரூமு. இது பெட்டு" என முதியோர் இல்ல பராமரிப்பாளர் கூறுவது சிரிப்பு.
#விக்ரமாதித்யாவை (நாகார்ஜுனா) கவனித்துக் கொள்ளும் பொறுப்புக்கு ஆள் எடுப்பது அருமை.
# வேலை கிடைத்ததும் தனது படுக்கை அறையையும் குளியலறையையும் பார்த்து பிரமிப்படைவது அருமை.
# கண்காட்சியில் ஓவியத்தை பார்த்துவிட்டு தானும் ஓவியம் வரைய முற்படுவது.
# நாகார்ஜுனா மணிக்கூண்டை உற்றுப்பார்ப்பதைக் கண்டதும் "இதெல்லாம் விற்க மாட்டாங்க" என கார்த்தி கலாய்ப்பது.
# பராமளிப்பாளர் என்பதற்காக காவலாளி போல விறைப்பாக இல்லாமல் விளையாட்டுத் தனத்துடன் மகிழ்ச்சிப்படுத்துவது அருமை.
# "என்ன நெனச்சி இந்த ஓவியத்தை வரைஞ்ச?"
"ஓவியத்தோட அர்த்தத்தை ஓவியன்கிட்ட கேட்கக்கூடாது. ரசிகன்தான் புரிஞ்சிக்கணும்"
திரைப்படம் அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளது. என்னால் குறைகள் எதனையும் காண முடியவில்லை. அன்பைப் பற்றி அழகாக எடுத்துரைத்திருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் கார்த்தி சிறையில் இருந்து மீண்டு வருவதும் நான்கு மாதத்திற்கு மட்டும் தான் நல்லவன் என்று போலியாக நீதிமன்றத்திடம் நிரூபிக்க சேவை செய்யும் வேலை தேடி அலையும் காட்சிகள் அலட்டல். மற்றபடி அருமை. விறுவிறுப்பான காட்சிகளும் சிறப்பான கதைக்களமும் திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன.
இறுதிப்பகுதியில் ஏனைய திரைப்படங்களைப் போல மகிழ்ச்சியின் மிகுதியில் நாகார்ஜூனா நோய் குணமாகி எங்கே எழுந்து நடந்து விடுவாரோ என்று பயந்தேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.
அங்கங்கள் செயலிழந்தாலும் மனதில் மகிழ்ச்சி இருந்தால் வாழ்க்கையை வெற்றி கொள்ளலாம் என்பது திரைப்படம் நமக்குத் தரும் பாடம். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. அன்பினால் எதையும் வெல்லலாம் , அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என நிரூபித்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். இது போன்ற திரைப்படங்கள் இன்னும் வெளிவர வேண்டும். வாழ்த்துக்கள் தோழா!
இறுதிப்பகுதியில் ஏனைய திரைப்படங்களைப் போல மகிழ்ச்சியின் மிகுதியில் நாகார்ஜூனா நோய் குணமாகி எங்கே எழுந்து நடந்து விடுவாரோ என்று பயந்தேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.
அங்கங்கள் செயலிழந்தாலும் மனதில் மகிழ்ச்சி இருந்தால் வாழ்க்கையை வெற்றி கொள்ளலாம் என்பது திரைப்படம் நமக்குத் தரும் பாடம். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. அன்பினால் எதையும் வெல்லலாம் , அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என நிரூபித்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். இது போன்ற திரைப்படங்கள் இன்னும் வெளிவர வேண்டும். வாழ்த்துக்கள் தோழா!
பார்க்கவில்லை. பார்க்க நினைத்திருக்கிறேன் உங்கள் பதிவு படித்த பிறகு!
ReplyDeleteநிச்சயம் பாருங்கள். நன்றி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
Delete