Posts

Showing posts from July, 2012

இன்னும் சொல்வேன் - 01

Image
மனம். இயற்கையின் படைப்பில் அற்புதமானதொரு சிருஷ்டிப்பு. ஏனெனில் அதன் போக்கை நம்மாலேயே புரிந்து கொள்ள முடிவதில்லை. சந்தோஷமோ, துக்கமோ எதுவாயிருந்தாலும் அதனை மனதுக்குள்ளேயே வைத்தால் அதற்குப் பெயர் குப்பை தான். நமது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள போதிய நண்பர் வட்டமோ அல்லது அதற்கு ஒப்பான யாரோ இருந்தால் எந்த விதக் குப்பையுமே சேர வாய்ப்பில்லை. ஆனால் எதற்கும் வரையறை இருக்கிறதே? ஒருவர் மீது முழுமையான நம்பிக்கை அல்லது பாசத்தை வைக்காதவரை இந்த வரையறை நம்மை எதுவும் செய்யப் போவதில்லை. மாறாக, பாசம் என்பது நம்மை, நமது உணர்வுகளை வரையறைக்குட்படுத்துகிறது.  அதாவது, ஒருவர் மீது உண்மையான பாசம் கொண்டிருந்தால் அவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பப் படுவதை நாம் விரும்பமாட்டோம். அந்த வேளையில் உங்களுக்கு ஏற்படும் ஒரு துன்பத்தை உடனே சொல்வீர்களா, அல்லது உங்களுக்குள்ளேயே புதைத்துக் கொள்வீர்களா? இங்கே தான் அன்பின் வரையறை ஆரம்பமாகிறது. நாம் நம்மவரின் நலன் கருதி நமது துன்பங்களை அவரிடம் பகிர்ந்து கொள்ளாது போனாலும் கூட, நமது நலன் பாதிக்கப் படுகிறதே? இப்போது நாம் எதைப் பற்றி பேசப் போகிறோம் என்பது உங்களுக்கெல்லாம்

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04

Image
பகுதி - 01 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 பகுதி - 02 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02 பகுதி - 03 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 பகுதி - 04 எல்லோரும் வாகனத்தில் ஏறிக் கொண்டிருக்க, நானும் ஏறத் தயாரான நேரம் எனது கைப் பேசிக்கு திவ்யாவின் இலக்கத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து வருடங்கள் இரண்டு ஆகிவிட்டாலும் கூட காதலிக்கும் போது பயன்படுத்திய அதே தொலைபேசி இலக்கங்களைத் தான் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முதன் முதலில் அவளிடம் என் காதலை வெளிப்படுத்திய தினத்தன்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இலக்கங்களைக் கொண்ட புதிய தொலைபேசி இணைப்புகளை (SIM) இருவரும் பெற்றுக் கொண்டோம். இன்று வரைக்கும் - ஏழு வருடங்களாக அதைத் தான் பயன்படுத்தி வருகிறோம்.  திவ்யா கதவருகில் சாய்ந்து நின்றபடி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் வீட்டுக்குப் போனதும் அவளுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தான் நான் வந்தேன். ஆனால் அவளிடமிருந்தே தகவல் வரும் என சற்றும் எதிர்பார்த்திருக

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03

Image
கல்யாண வைபோகம் - தொடர் கதை - முழுத்தொகுப்பு அத்தியாயம் - 03   "வாங்க....வாங்க...." என்று வரவேற்றார் பெண்ணின் தந்தை. வீட்டு முற்றத்தில் கோலம் இடப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் ரசிக்கத் தூண்டும் வகையில் இருந்தது அந்த வண்ணக் கோலம். வீட்டு வாசலில் கரும்பு மற்றும் தென்னங் குருத்தினால் அமைக்கப் பட்ட எளிமையான தோரணம் காற்றில் அசைந்தாடிய படி வரவேற்றது. வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்செடிகளும் ஓரிரு மரங்களும் மனதுக்கு இதத்தையும் வீட்டுக்கு அழகையும் கொடுத்தன. வீட்டின் வரவேற்பறையில் பெரிய பாய் ஒன்று இடப் பட்டிருந்தது. பாயின் நடுவில் ஏற்றப்பட்ட குத்துவிளக்கு ஒன்று வைக்கப் பட்டிருந்தது. கொண்டு வந்த பொருட்களை வரிசைப் படி அடுக்கி வைத்து விட்டு முன் வரிசையில் என்னையும் குடும்பத்தினரையும் அமர வைத்து, சூழ இரு வீட்டாரும் அமர்ந்து கொண்டனர். இரு தரப்பினரும் ஏதேதோ பேசிக் கொண்டனர். எதுவுமே என் காதில் விழவேயில்லை. மனம் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து பெண் பார்க்கும் நேரமும் வந்தது. இந்த சம்பிரதாயம் தேவை தானா என்று கேட்டது என் மனம். பெற்றோரி

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02

Image
கல்யாண வைபோகம் - தொடர் கதை - முழுத்தொகுப்பு அத்தியாயம் - 02  அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன்.  முழுமையாகப் படிக்க   Post Date 12/07/2012 | Edit date 19/09/2018  கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம்

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01

Image
"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?" "நீ இல்லாம எப்படி ஜெய்?" "எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....." "நேத்து வரேன்னு தானேடா சொன்ன?" முழுமையாகப் படிக்க     Post Date 05/07/2012 | Edit date 15/09/2018  கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம் 

முக நூல் முத்துக்கள் பத்து

Image
எனது முக நூலில் (பேஸ்புக்) என்னைக் கவர்ந்த சில பகிர்வுகளை இங்கே நானும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவை இதோ: 01. #என்னிடம் 271 நண்பர்களுடன் (254 பெண்கள் நண்பிகள்) ஒரு பொய்யான fb account விட்பனைக்கி உண்டு தேவையானவர்கள் தொடர்பு கொள்ளவும் .....# 02. #முகத்தை காணும் முன்பே நேசிக்கத்  தெரிந்தவள் " தாய்" மட்டுமே # 03. # தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல தாய்வழி சொந்தம் போல பாசமில நேசமில்ல சொந்தம் நூறு சொந்தம் இருக்குது பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா சாமி நூறு சாமி இருக்குது தாய் ரெண்டு தாய் இருக்குதா  Image Credit: Google / Facebook 04. #காதல்- காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி. தூங்கவும் முடியாது... துரத்தவும் முடியாது...# 05. #ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு... புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!! -அப்துல் கலாம்-# 06. #நீங்கள் வாழக் கற்றுக்கொடுத்ததில்லை..  வாழ்ந்து காட்டினீர்கள்..  அப்பா உங்களை பார்த்தே வளர்ந்தோம்..